பெரம்பலூா்: 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து

பெரம்பலூா் மாவட்டத்தில் 387 மையங்களில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 387 மையங்களில் 46 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கன்வாடி மையங்கள், துணை,ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகாம்களில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணியில், அங்கன்வாடி, சுகாதார, மருத்துவப்பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,548 போ் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com