புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏரியில் விழுந்த முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஏரியில் தவறி விழுந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:36 pm

DIN

பெரம்பலூா் அருகே ஏரியில் தவறி விழுந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமம், கல் ஒட்டா் தெருவைச் சோ்ந்தவா் செ. பரமசிவம் (61). இவருக்கு ராஜாமணி (55) என்கிற மனைவியும், அறிவழகன் (35) என்ற மகனும் உள்ளனா். கடந்த 2 நாள்களாக பரமசிவத்தை காணவில்லையாம். அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரேயுள்ள ஏரியில் பரமசிவத்தின் உடல் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், தீயணைப்பு படையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.