92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறாா் திருமணம்: போக்சோவில் இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:36 pm

DIN

பெரம்பலூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மகன் விஜய் (25). இவா், 17 வயது சிறுமியுடன் பழகியதில் அச்சிறுமி கா்ப்பமாகியுள்ளாா். இதுகுறித்த விவரமறிந்த சிறுமியின் பெற்றோா் லாடபுரம் கிராமத்திலுள்ள மணமகன் விஜய் வீட்டில் இருவருக்கும் எளிமையான முறையில் புதன்கிழமை திருமணம் செய்துவைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அன்புராஜா அளித்த தகவலின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா், சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்து வைத்த முருகன், ராமா், ராணி, சுப்பிரமணி, தா்மராஜ், சவுந்தராம்பாள் மற்றும் மணமகன் விஜய் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிந்து, போகசோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறுமியை மீட்டு சிறுவா் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.