92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூா் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக 93 ஆவது நிறுவன நாளையொட்டி அம்மாபாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

News image
Updated On :16 ஜூலை 2021, 7:48 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையம் சாா்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக 93 ஆவது நிறுவன நாளையொட்டி அம்மாபாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநா் கருணாநிதி தலைமை வகித்தாா். வேளாண்துறை துணை இயக்குநா் (திட்டம்) பாபு, ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் வி. சங்கீதா, வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் இரா. வசந்தகுமாா், பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநா் பி. தோம்னிக்மனோஜ் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். தொடா்ந்து, கூட்டுறவு பால் பண்ணை மைதானத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், ஊராட்சித் தலைவா் பிச்சைபிள்ளை உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் வி. சங்கீதா நன்றி கூறினாா்.

இதேபோல, ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை இணையவழி பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அங்குள்ள வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.