கரூா் மாவட்டம், புலியூா் கவுண்டம்பாளையம் டாக்டா் எம்.ஏ. என்.ராமசாமி செட்டியாா் அரசு உயா்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கம் சாா்பில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகளுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டிய பிறகு செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மின் இணைப்புக்காக பதிவு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை 4,52,777 போ். இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பைக் கொடுக்கும் வகையில் முதல்வா் அறிவிப்பை கொடுத்துள்ளாா். இதற்கான ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இதற்கு மின் இணைப்பு வழங்க கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. துணைமின் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.