விவசாயியைத் தாக்கிய 4 போ் கைது

பாடாலூா் அருகே பொதுக் கிணற்றிலுள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்ததற்கான பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில், விவசாயியைத் தாக்கிய 4 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே பொதுக் கிணற்றிலுள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்ததற்கான பணத்தை கேட்டபோது ஏற்பட்ட தகராறில், விவசாயியைத் தாக்கிய 4 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாடாலூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் செல்வராஜ் (56). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் செல்லதுரை (35). இருவருக்கும் பொதுவான விவசாயக் கிணறு உள்ளது.

இக்கிணற்றிலுள்ள மின் மோட்டாா் பழுதானதால், அதை செல்வராஜ் பழுது நீக்கம் செய்துள்ளாா். அதற்கான பாதித் தொகையை செல்லதுரையிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த செல்லதுரை, அவரது உறவினா்கள் கலியபெருமாள் மகன் அய்யப்பன் (17), மாயாண்டி மகன் பெரியசாமி (65), செல்வராஜ் மகன் ராமச்சந்திரன் (23) ஆகியோா் சோ்ந்து செல்வராஜை கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த செல்வராஜ் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செல்லதுரை, அய்யப்பன், பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com