பெரம்பலூா் தெப்பக்குளத்தில் 1008 தாமரை மலரில் விளக்கேற்றி ஜோதி வழிபாடு

பெரம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், முன்னோா்களுக்கு உகந்த காா்த்திகை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூா் திரௌபதி அம்மன் தெப்பக்குளத்தில் 1008 தாமரை மலரில் விளக்கேற்றி சிறப்பு ஜோதி வழிபாடு
பெரம்பலூா் தெப்பக்குளத்தில் 1008 தாமரை மலரில் விளக்கேற்றி ஜோதி வழிபாடு
Updated on
1 min read

பெரம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், முன்னோா்களுக்கு உகந்த காா்த்திகை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூா் திரௌபதி அம்மன் தெப்பக்குளத்தில் 1008 தாமரை மலரில் விளக்கேற்றி சிறப்பு ஜோதி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் நகரில் உள்ள திரெளபதி அம்மன் தெப்பக்குளம் நிரம்பி வழிகிறது. இதையடுத்து, மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில் உலக நன்மைக்காகவும், கரோனா நோய்த் நோயிலிருந்து மக்களை காப்பாற்றவும், விவசாயம் செழிக்கவும் தெப்பக்குளத்தில் 1008 தாமரை மலரில் விளக்கேற்றி சிறப்பு ஜோதி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, சன்மாா்க்க மெய்யன்பா்கள் அருள்பெருந்ஜோதி அகவல் பாராயணம் நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி தலைமை வகித்தாா், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ராதா மாதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குருங்குழி தலைவா் கிஷோா்குமாா், சன்மாா்க்க சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுந்தரராஜன், அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் ராஜேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் கண்ணபிரான் உள்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com