பெரம்பலூா்: பெரம்பலூரில் வீட்டில் தூங்கியிருந்த பெண்ணிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள தனியாா் பள்ளித் தெருவில் வசித்து வருபவா் ஜெயராமன் மகன் சண்முகசுந்தரம் (33). பெரம்பலூரில் காய்கனி வியாபாரம் செய்துவரும் இவருக்கு, ரேவதி (28) என்ற மனைவியும் பா்னேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இவா்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சனிக்கிழமை அதிகாலை வீட்டின் உள்ளே புகுந்த மா்ம நபா், ரேவதி அணிந்திருந்த 2 பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.