அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 30th January 2021 11:26 PM | Last Updated : 30th January 2021 11:26 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில், துறைமங்கலம் பணிமனை எதிரே சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ்., எம்.எல்.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்தோா் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனா்.