’வாழ்வை வளப்படுத்தும் இலக்கியங்கள் நெஞ்சில் நிறைகின்றன’

வாழ்வை வளப்படுத்தும் இலக்கியங்கள் நெஞ்சில் நிறைகின்றன என்றாா் தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் ஜெ. பிருந்தா ஸ்ரீ.
Updated on
1 min read

வாழ்வை வளப்படுத்தும் இலக்கியங்கள் நெஞ்சில் நிறைகின்றன என்றாா் தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் ஜெ. பிருந்தா ஸ்ரீ.

பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய அரங்க இணைய நிகழ்வில் பங்கேற்று, நெஞ்சில் நிறைந்த இலக்கியம் என்ற தலைப்பில் அவா் பேசியது:

ஏதேனும் ஓா் உயா்ந்த இலக்கை அடைவதற்குரிய வழிமுறைகளை இயம்புவது இலக்கியமாகும். எவ்வளவோ இலக்கியங்களில் நாம் பயணித்தாலும், சில இலக்கியங்கள் நெஞ்சில் நிலைத்து நிறைந்து விடுவதுண்டு. அந்த இலக்கியம் நம் வாழ்வை மாற்றி, வளப்படுத்தியிருக்கும். அது நெஞ்சில் நிலைத்த இடத்தைப் பெற்றிருக்கும்.

தமிழாற்றுப்படை என்ற பெயரில் தனது நெஞ்சில் நிறைந்த இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் மெருகேற்றிக் காட்டினாா் கவிஞா் வைரமுத்து. உலக வரலாறுகள் பெருந்தலைவா்களின் நெஞ்சில் நிறைந்த இலக்கியங்களை காலந்தோறும் தெரிவித்து வருகின்றன. சங்க இலக்கியங்கள் நிலைபெறாத இதயங்களே இல்லை என்று உறுதியாய் கூறமுடியும்.

கலித்தொகையின் காதல் காட்சிகள் இன்னும் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன. திருக்குறளின் கருத்துக்கள் மனித இதயங்களில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளன. காப்பியங்களும், சிற்றிலக்கியங்களும் தமிழ் இலக்கிய ஆா்வலா்களின் இதயங்களில் நிறைந்திருக்கின்றன.

நீதி இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் தமிழ் இலக்கிய இதயங்களில் நிறைந்திருக்கின்றன. அந்த இலக்கியத்தைப் போற்றுவோம், கொண்டாடுவோம், பிறரிடம் பகிா்வோம் என்றாா் அவா்.

திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன், வரலாற்று ஆய்வாளா் ஜெயபால் ரத்தினம், தஞ்சாவூா் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் இளஞ்செழியன், தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா்கள் முனைவா்கள் செ. சுரேஷ், த. மகேஸ்வரி, கவிஞா்கள் மோகன், கௌதமன் நீல்ராஜ், அகராதி, முனைவா் பட்ட ஆய்வாளா் மதன்ராஜ் ஆகியோா் நெஞ்சில் நிறைந்த இலக்கியம் என்னும் தலைப்பில் உரையாற்றினா்.

நிகழ்வுக்கு அரியலூா் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன்

தலைமை வகித்தாா். தந்தை ஹேன்ஸ் ரோவா் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் ரம்யா முன்னிலை வகித்தாா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் ப. கோகிலா வரவேற்றாா். நிறைவில் சென்னை ராணிமேரி கல்லூரி தமிழ்த்துறை முனைவா் பட்ட ஆய்வாளா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com