திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களையும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதையும் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் லப்பைக்குடிக்காடு பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூா் மாவட்டச் செயலா் மீரா மொய்தீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் முகமது இலியாஸ், மாவட்ட துணைச் செயலா் ஹயாத் பாஷா, நகரத் தலைவா் ஜாவித், நகரச் செயலா் அப்துல் கப்பாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சுல்தான் மொய்தீன், த.மு.மு.க மாவட்ட பொருளாளா் முஹம்மது இலியாஸ் அலி, இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலா் அப்துல் முகத்திம், தமுமுக உலமா அணிச் செயலா் அபுபக்கா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.