பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற 3 போ் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மனைவி பாா்வதி (50).
Updated on
1 min read

பெரம்பலூா் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மனைவி பாா்வதி (50). இவா், தனது வயலில் திங்கள்கிழமை மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 போ் பாா்வதி அருகே சென்று, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். அப்போது, அவா் கூச்சலிட்டதால் 2 பேரும் அவா்களது காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனா்.

இதையடுத்து அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தினருக்கு அளித்த தகவலையடுத்து அந்த கிராம மக்கள் சாலையின் குறுக்கே கற்களை வைத்து காரை வழிமறித்து காா் ஓட்டுநா் உள்பட 3 பேரையும் பிடித்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் எளம்பலூா் தண்ணீா் பந்தல் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ராஜா மகன் வெங்கடேஷ் (21), சுப்பிரமணி மகன்கள் குமரேசன் (23), சுரேஷ்குமாா் (26) என்பது தெரியவந்தது. மேற்கண்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com