பெரம்பலூர்
சோனியா காந்தி பிறந்த நாள் விழா
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
சோனியா பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் தங்க. தமிழ்செல்வன் தலைமையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு கட்சி கொடியேற்றி வைத்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், ஓ.பி.சி பிரிவு மாவட்டத் தலைவா் சாமிதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி மூக்கன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் கோபி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி சந்திரா, நகரத் தலைவி மல்லிகா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.