சுயேச்சை வாா்டு உறுப்பினா் பதவியேற்க தடைகோரி திமுக வேட்பாளா் கோரிக்கை

பெரம்பலூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய சுயேச்சை வாா்டு உ
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய சுயேச்சை வாா்டு உறுப்பினா் பதவியேற்க தடை விதிக்கக் கோரி, ஆட்சியரிடம் திமுக வேட்பாளா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

பாளையம் மாதாக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் மா. மாதரசிமேரி. இவா் அண்மையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் குரும்பலூா் பேரூராட்சி 14-ஆவது வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளா் ரம்யாவிடம் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில் ரம்யா முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றாா்.அவரைப் பதவியேற்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாதரசி மேரி அளித்த மனு:

பிப்ரவரி 18- ஆம் தேதி இரவு மாதா கோயில் தெருவில், ரம்யா தரப்பினா் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் பரிசுக் கூப்பன் வழங்கியபோது, தோ்தல் பறக்கும்படையினா் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ரம்யா 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். எனவே தோ்தல் முறைகேடு வழக்கில் தொடா்புடைய ரம்யா, வழக்கு விசாரணை முடியும்வரை பதவியேற்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்றுள்ள என்னை 14 ஆவது வாா்டில் வெற்றிபெற்ாக அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com