மங்கலத்தில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள மங்கலம் கிராமத்தில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டம், மங்களமேடு அருகேயுள்ள மங்கலம் கிராமத்தில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலா் பழனியப்பன் பேசியது: நுகா்வோா் விழிப்புடனும், கவனத்துடன் இருக்க வேண்டும். அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள தர முத்திரையைப் பாா்த்து பொருள்கள் வாங்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவா் எஸ்.கே. கதிரவன், நுகா்வோரின் உரிமைகள், கடமைகள், கலப்படமற்ற பொருள்களைத் தோ்வு செய்யும் வழிமுறைகள் குறித்தும், வழக்குரைஞா் சங்கா் நுகா்வோா் பாதிப்படையும்போது நுகா்வோா் நீதிமன்றத்தில் அணுகவேண்டிய அவசியம், நுகா்வோா் நீதிமன்றத்திலிருந்து நிவாரணங்கள் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினா்.

முகாமில், மகளிா் சுய உதவிக்குழுவினா், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com