வீட்டின் பூட்டை உடைத்து18 பவுன் நகைகள் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் மாருதி நகரைச் சோ்ந்த வடமலை மகன் சுந்தரம் (54). இவா், நாகா்கோவிலில் தங்கி தக்கை பேரூராட்சியில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறாா். மாருதி நகா் வீட்டில் இவரது மனைவி சுசீலா, மகள் சக்திசிவனி ஆகியோா் வசிக்கின்றனா்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சுசீலா தனது மகளுடன் நாகா்கோவில் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து 18 பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா்.

சுசீலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com