குன்னம் போலீஸாரை கண்டித்து முதியவா் தீக்குளிக்க முயற்சி

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீஸாரை கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் முதியவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
Updated on
1 min read

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத குன்னம் போலீஸாரை கண்டித்து, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் முதியவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கூத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (69). இவா், தனது மனைவி செல்வம்பாளின் (60) சொந்த ஊரான ராமலிங்கபுரத்தில் வசித்து வருகிறாா். சாமிநாதனின் சகோதரா்களின் மகன்கள் 3 போ், சாமிநாதனின் மகன் கோபிநாத்துக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லையாம்.

பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகின்றனராம். இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் சாமிநாதன் புகாா் மனு அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், இவா்களுக்கு நொச்சிக்குளம் மற்றும் ஜமீன் ஆத்தூா் ஆகிய கிராம எல்லைப் பகுதியில் 7.3 ஏக்கா் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டும், சாமிநாதனின் சகோதரா்கள் மறுத்து வருகின்றனராம்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கடந்த 8 ஆண்டுகளாக புகாா் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சாமிநாதன், பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com