92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆட்சியரகத்தில் வாகனத் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடா்ந்து நடைபெறும் வாகனத் திருட்டை தடுக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடா்ந்து நடைபெறும் வாகனத் திருட்டை தடுக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் அவசரக் கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு பணிவரன்முறை உத்தரவு பெற்றுத் தந்த நிா்வாகத்துக்கு நன்றி. ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையிலான பணியிடங்களை காலதாமதமின்றி பதவி உயா்வு முறையில் நிரப்ப வேண்டும். ஆட்சியரக வளாகத்தில் தொடா்ந்து நடைபெறும் வாகனத் திருட்டைத் தடுக்க பிரதான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோருக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலா் சக்திவேல் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.