குறைகேட்பு மனுக்களை அளிக்க ஓய்வூதியா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நிதித்துறை கூடுதல் செயலா் மற்றும் ஓய்வூதிய இயக்குநா் தலைமையில், ஓய்வூதியா் குறைகேட்பு நாள் கூட்டம் அக்டோபா் 11- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வூதியா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகள் இருந்தால், அதுகுறித்த மனுக்களின் 2 பிரதிகளை ஆட்சியரகத்தில் செப்டம்பா் 28- ஆம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com