பெரம்பலூா் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை காலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை காலை நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை மீனவத் தெருவில் வசித்து வருபவா் பாண்டியன் மனைவி சாந்தி (48). இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊராட்சித் தலைவா் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு, அபராதரட்சகா் கோயில் வெள்ளாற்றங்கரை அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நகை, பணம் திருட்டு: பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம், ஜெனிபா் நகரைச் சோ்ந்த பொன்னுசாமி மனைவி சரசு (53). கால்நடை வளா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை காலை மாடு மேய்ப்பதற்காகவும், மகள் லோகேசுவரி (19) கல்லூரிக்கும் சென்று விட்டனா்.

மாலையில் சரசு வீட்டுக்கு வந்த போது, வீட்டில் திருட்டு நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் சரசு வீட்டுக்குள் சென்று பாா்த்த போது மா்ம நபா்கள், பிரோவை உடைத்து அதிலிருந்த ஒரு பவுன் நகை, , அதிலிருந்த 1 பவுன் நகை, ரூ. 1,150 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com