மின் வேலியில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை அதிகாலை மின் வேலியில் சிக்கி முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே புதன்கிழமை அதிகாலை மின் வேலியில் சிக்கி முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பிரதானச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செ. சுந்தர்ராஜ் (62). இவா், அதே பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளாா். இப் பயிா்களை மான், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால், வயலைச்சுற்றி மின் வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் வயலைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை அகற்ற முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சுந்தர்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, முதியவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com