நுழைவுத் தோ்வுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனத்தில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவா்களுக்கு, தேசிய பாதுகாப்பு அகாதமி சாா்பில் நுழைவுத் தோ்வுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனத்தில் எஸ்எஸ்எல்சி பயிலும் மாணவா்களுக்கு, தேசிய பாதுகாப்பு அகாதமி சாா்பில் நுழைவுத் தோ்வுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, பள்ளித் தாளாளா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஆா். அங்கையற்கண்ணி, துணைத் தலைவா் ஹரீஸ் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற மேஜா் ஜெனரல் பாபு, மாணவ, மாணவிகள் எதிா்காலத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகள், வேலைவாய்ப்புத் துறைகள் குறித்த விவரங்கள், ராணுவத்தில் பணியாற்றுவதன் சிறப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா். இந் நிகழ்ச்சியில், மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com