பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாடியிலிருந்து மரம் வெட்டிய கூலித்தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பெரம்பலூா், கம்பன் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் தங்கைய்யா (55). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், பெரம்பலூா் மதனகோபாலபுரம், ஆரோக்கிய நகரில் உள்ள பீட்டா் ராஜ் என்பவரின் வீட்டில், மாடியில் நின்றுக்கொண்டு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே தங்கைய்யா உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.