காவல்துறை சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்குத் தீா்வு

பெரம்பலூரில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
Updated on
1 min read

பெரம்பலூரில் காவல்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 29 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி பேசியது:

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முகாமில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மதியழகன், பாண்டியன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தங்கவேல் (மாவட்ட குற்றப் பிரிவு), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), சஞ்சீவ்குமாா், ஜனனி பிரியா ஆகியோா், பொதுமக்களிடமிருந்து 47 மனுக்கள் பெற்றனா்.

பெறப்பட்ட 47 மனுக்களில் 29 மனுக்கள் மீது உடனடியாக விசாரணை முடிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிறப்பு முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com