பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
மாவட்ட ஆட்சியரகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மணிமேகலை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கொளஞ்சி வாசு கோரிக்கைகளை விளக்கினாா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம், பணிக்கொடையாக அலுவலா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையல் உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

முன்னாள் மாவட்டத் தலைவா் பொன். ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். தமிழ்மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com