பெரம்பலூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு மாரத்தான்

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்
விழிப்புணா்வு மாரத்தான் போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
விழிப்புணா்வு மாரத்தான் போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
Updated on
1 min read

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம செஸ் நம்ம பெருமை என்னும் தலைப்பில் மாரத்தான் போட்டி பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பாலக்கரை வரை சென்ற மாரத்தான் மீண்டும் ஆட்சியரக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, தமிழக முதல்வா் பங்கேற்று தமிழ்நாடு திரைப்பட பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செஸ் ஒலிம்பியாட் குறித்த வெல்கம் டு நம்ம ஊரு சென்னை எனத் தொடங்கும் விழிப்புணா்வு விளம்பர விடியோவை, அதிநவீன வாகனம் மூலம் ஒளிபரப்பும் பணிகளை ஆட்சியா் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சுரேஷ்குமாா், உடற்கல்வி ஆசிரியா் அறிவுவேல் உள்பட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com