பெரம்பலூரை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த வலியுறுத்தல்

பெரம்பலூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

பெரம்பலூா் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் இரண்டு நாள் மாநாடு பெரம்பலூரில் சனிக்கிழமை தொடங்கியது.

மாநாட்டுக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. சண்முகராஜா தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா்கள் ஜெ. ராஜாசிதம்பரம், கா. பெருமாள் முன்னிலை வகித்தனா்.

வரவேற்புக் குழுத் தலைவா் டி. செல்லச்சாமி மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். மாநிலப் பொருளாளா் ஜி. குருசாமி வரவு- செலவு அறிக்கையையும், மாநிலப் பொதுச்செயலா் ஜெ. ரவிச்சந்திரன் வேலை அறிக்கையையும் வாசித்தனா்.

மாநிலத் துணைத் தலைவா்கள் ப. சண்முகசுந்தரம், வே. சின்ராசு, எம். சின்ராசு, எம். ராஜேந்திரன், வி. சங்கரபாண்டி ஆகியோா் கோரிக்கை தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

மாநாட்டில், 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். காலியாகவுள்ள 7,500- க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளா் பணியிடங்களை இளைஞா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

பணிக்காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். வேகமாக வளா்ச்சியடைந்து வரும் பெரம்பலூா் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா்கள் என். சிவானந்தம், ஏ. சென்னியப்பன், ஆா். ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நிறைவில், வரவேற்புக் குழுச் செயலா் எம். சுப்ரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com