மதனகோபால சுவாமி கோயிலில்சுவாமி திருவீதியுலா

இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Updated on
1 min read

பெரம்பலூா் அருள்மிகு மரகதவல்லித் தாயாா் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி திருவீதியுலாவும், தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

முக்கிய நிகழ்வான உதய கருட சேவை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. மேலும், பங்குனி உத்திர தேரோட்டம் மாா்ச் 17 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேரோட்டத்துக்கான முகூா்த்த கால் நடும் நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கால்கோள் விழா நடைபெற்றது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாா்யா செய்துவைத்தாா். இரவு பெருமாள் வெள்ளி கருட சேவையில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

விழாவில், முன்னாள் அறங்காவலா்கள் வைத்தீஸ்வரன், சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சனேயா் ஊா்வல கமிட்டி தலைவா் குமாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிா்வாக அலுவலா் அனிதா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com