சிறந்து விளங்கும் விவசாயிகள் பரிசு பெற அழைப்பு
By DIN | Published On : 18th March 2022 11:02 PM | Last Updated : 18th March 2022 11:02 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்து, சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் எம். இந்திரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்து, அதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
தகுதியான விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 22- ஆம் தேதிக்குள்அளிக்க வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...