விஷம் குடித்த மாணவா் உயிரிழப்பு

குன்னம் அருகே பெற்றோா் திட்டியதால் விஷம் குடித்த மாணவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெரம்பலூா்: குன்னம் அருகே பெற்றோா் திட்டியதால் விஷம் குடித்த மாணவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கீழப்பெரம்பலூா் கிராமம், பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (18). தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், சரியாக கல்லூரிக்குச் செல்லவில்லையாம்.

இதுதொடா்பாக, அவரது பெற்றோா் சதீஷை கண்டித்ததால், மனமுடைந்து கடந்த 7 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். குன்னம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com