பண மோசடி வழக்கில் இந்திய தொழிலாளா் கட்சித் தலைவா் பி.ஆா். ஈஸ்வரன் கைது

பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் இந்திய தொழிலாளா் கட்சி மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் இந்திய தொழிலாளா் கட்சி மாநிலத் தலைவா் பி.ஆா். ஈஸ்வரனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் ஈஸ்வரன் (42). இந்திய தொழிலாளா் கட்சியின் மாநிலத் தலைவா்.

இவா், பெரம்பலூா் -வடக்குமாதவி சாலையைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ராவிடம் கடனாக பணம் கேட்டுள்ளாா். இதனடிப்படையில், ஈஸ்வரனுக்கு அவா் ரூ. 8 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகைகளை கொடுத்துள்ளாா். மேலும், ஈஸ்வரனின் மகன் கோகுலிடம் ரூ. 1 லட்சம் கொடுத்தாராம். பணம் மற்றும் நகைகளை கொடுத்து 3 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் அவா் திருப்பி கொடுக்கவில்லையாம்.

அண்மையில் பணம், நகைகள் குறித்து சித்ரா கேட்டபோது, அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, அவருக்கு ஈஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஈஸ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com