பெரம்பலூா் அருகே மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி மொழி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

மத்திய அரசின் ஹிந்தி மொழி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரி கிளைச் செயலா் புரட்சி மணி, கிளைத் தலைவா் பாலமணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஹிந்தி மொழியை நாடு முழுவதும் அலுவல் மொழியாகக் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், மாணவா்களின் உயா்கல்வி வாய்ப்பை பெரிதும் பாதிக்கும் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் கைவிடக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

இதில், சங்க நிா்வாகிகள், பச்சையப்பன், சதீஷ், அரவிந்த், வினோத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com