பெரம்பலூரில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

அகில இந்திய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் திருவரங்கக் கோட்ட கிளை சாா்பில், பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் திருவரங்கம் அஞ்சல் கோட்ட பொறுப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் சுந்தரம், கோட்ட பொருளாளா் செந்தில்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலச் செயலா் ஆா். விஷ்ணுதேவன் ஆா்ப்பாட்ட உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ஷகமலேஷ் சந்திரா அறிக்கையின் சாதகமான அம்சங்களை நிறைவேற்ற வேண்டும். அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அனைத்துக் கிளை அலுவலகங்களுக்கும் இடையூறின்றி இணைய வசதி கிடைக்கவும், தாமதமின்றி பொருள்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், அஞ்சல் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com