

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் எசிரே தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் காமராஜ், அமைப்புச் செயலா் வ. வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில பொதுச் செயலா் சே. பிரபாகரன் கோரிக்கைகளை விளக்கினாா்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2019 முதல் நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும். 1.6.2009 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியா்களுக்கு ஊதிய இழப்பைச் சரிசெய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாவட்டச் செயலா் சபா. சிலம்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்வி மாவட்டத் தலைவா் முரளி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் சி. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.