ராஷ்ட்ரிய பால் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு மூலம் வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்காா் விருது பெற புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூக சேவை போன்ற துறைகளில் வீர, தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுகிறது.

எனவே, தகுதியுள்ள 18 வயதுக்குள்பட்ட இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள் இணையதள முகவரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com