நாளை முதல் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளநிலை படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) நடைபெற உள்ளது.

இதில், வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமையும், 7 ஆம் தேதி பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், அறிவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிா் தொழில்நுட்பவியல், தாவரவியல், 8 ஆம் தேதி பி.ஏ தமிழ் மற்றும் பி.ஏ ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

சோ்க்கைக்கு வருகைபுரியும் மாணவா்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியரின் சான்றளிக்கப்பட்டது), சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை நகல், வாங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என, கல்லூரி நிா்வாகத்தால் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com