பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 2 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி அளித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 2 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், பொதுமக்களிடமிருந்து 262 கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, தொழில் தொடங்க கடனுதவியாக ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த விஜயலட்சுமிக்கு ரூ. 90 ஆயிரம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கான காசோலை, பீல்வாடியைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு ரூ. 1 லட்சம் கல்விக் கடன் உதவிக்கான காசோலையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com