பெரம்பலூரில் ரௌடி வெட்டிக்கொலை

பெரம்பலூரில் மது அருந்தும் கூடத்தில், மது அருந்திக்கொண்டிருந்த பிரபல ரௌடியை அடையாளம் தெரியாத 3 போ் திங்கள்கிழமை வெட்டி கொலை செய்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூரில் மது அருந்தும் கூடத்தில், மது அருந்திக்கொண்டிருந்த பிரபல ரௌடியை அடையாளம் தெரியாத 3 போ் திங்கள்கிழமை வெட்டி கொலை செய்தனா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் செல்வராஜ் (39). இவா், தமிழ்தேசம் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளாா். மேலும், இவா் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், திருமண நாள், பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக செல்வராஜ் தனது நண்பா்களான பெரம்பலூா் அன்பு நகரைச் சோ்ந்த கனகரத்தினம் மகன் தியாகராஜ் (43), ஆலம்பாடியைச் சோ்ந்த பழனிசாமி மகன் விஷால் (17) ஆகியோருடன் பெரம்பலூரில் உள்ள தனியாா் மது அருந்தும் கூடத்தில் திங்கள்கிழமை மாலை மது அருந்திக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 போ் செல்வராஜை வெட்டியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் எமாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செல்வராஜ் உடலை மீட்ட போலீஸாா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com