சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ரூ. 49.63 லட்சம் காணிக்கை

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பக்தா்கள் ரூ. 49.63 லட்சம் ரொக்கம், 261 கிராம் தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பக்தா்கள் ரூ. 49.63 லட்சம் ரொக்கம், 261 கிராம் தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணுவது வழக்கம்.

கடந்த ஏப். 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்ால் மாா்ச் மாதம் உண்டியல்கள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் உதவி ஆணையா் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமையில், மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, சரக ஆய்வாளா் தீபாதேவி ஆகியோா் முன்னிலையில், கோயிலில் உள்ள 7 உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், ரூ. 49,63,077 ரொக்கமும், 261 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், 167 டாலா், தினாா் உள்ளிட்ட வெளிநாட்டு பணமும் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கி ஊழியா்கள், ஆன்மிக அன்பா்கள் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com