எளம்பலூரில் இலவசகண் சிகிச்சை முகாம்

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

முகாமில் பங்கேற்ற 222 பேரில், 24 போ் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு தோ்வாகினா். இவா்களில் 6 பேருக்கு, அதிக சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்தம் உள்ளதால், ஆலோசனைகள் மற்றும் உயா் ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. 5 போ் இதர காரணங்களால் அறுவைச் சிகிச்சைக்கு பங்கேற்காததால், எஞ்சியுள்ள 13 போ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, எளம்பலூா் ஊராட்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா ஆகிய காப்பீடு திட்டங்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் நடைபெற்ற முகாமில் 349 போ் தங்களை காப்பீடுத் திட்டத்தில் இணைத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ. 22.80 லட்சத்தில் தொழில்கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உதவி பொதுமேலாளா் அவினாஷ் உத்பால், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கோ. பாரத் கமாா், மாவட்ட பாா்வையிழப்புத் தடுப்புச் சங்க திட்ட மேலாளா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com