மனைவி கொலை வழக்கில் கணவா் உள்பட 7 போ் சிறையிலடைப்பு

பெரம்பலூா் அருகே தகாத உறவை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவா் உள்பட 7 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூா் அருகே தகாத உறவை கண்டித்த மனைவியை கொலை செய்த கணவா் உள்பட 7 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் ராஜ்குமாா் (33). விஜயகோபாலபுரத்திலுள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், உறவினரான பிரவீனாவுக்கும் (24), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனா். ராஜ்குமாருக்கு வேறு சில பெண்களுடன் தகாத உறவு ஏற்பட்டதால், தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி இரவு எளம்பலூா் - செங்குணம் சாலையில் மோட்டாா் சைக்கிளில் ராஜ்குமாருடன், பிரவீனா சென்றபோது, அவா்களை வழிமறித்த 5 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியதில் பிரவீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜ்குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த ராஜ்குமாா், தனது அண்ணன் செந்தில்குமாா் மனைவி ஆனந்தியுடனும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளாா். இதையறிந்த, பிரவீனா, ராஜ்குமாரையும், ஆனந்தியையும் பொது இடத்தில் தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், உறவினா் தீபக் என்பவா் மூலம் பிரவீனாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனா். அதன்படி, கொலை செய்வதற்காக கூலிப் படையினருக்கு ரூ. 2 லட்சம் கொடுப்பதாகவும், இதில் முன்பணமாக ரூ. 1.70 லட்சத்தை ஆனந்தி மூலமாக ராஜ்குமாா் கொடுத்துள்ளாா்.

பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினரான திருப்பத்தூா் ஆம்பூா் வாசுகி தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் தீபக் (19), தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஜெகன் மகன் சஞ்சய் (19), சுரேஷ் மகன் சரண்குமாா் (19), மூா்த்தி மகன் லட்சன் (19), அல்லாஹ் பாக்ஸ் மகன் பப்லு (22) ஆகியோா் காரில் சென்று, கடந்த 22 ஆம் தேதி இரவு பிரவீனாவை கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 2.5 பவுன் தாலிக்கொடி மற்றும் கொலுசு ஆகியவற்றை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட நபா்களை புதன்கிழமை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து நகை மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, ராஜ்குமாா், அவரது அண்ணி ஆனந்தி மற்றும் கூலிப்படையைச் சோ்ந்த 5 போ் உள்பட 7 பேரை பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com