வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Updated on
1 min read

இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தபட்டு, உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால், வழக்குரைஞா்களின் நலன் கருதியும், நீதிமன்றப் பணிகள் பாதிக்காமல் இருக்கவும் இ-பைலிங் முறையை கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் வழக்குரைஞா்களை காலவரையற்ற நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் வழக்குரைஞா் சங்கத்தினா் மற்றும் அட்வகேட்ஸ் அசோசியேஷனைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் நடத்திய போராட்டத்தால் மாவட்டத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com