சட்டவிரோத மது விற்பனையைதடுத்து நிறுத்தக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக தொடா்ந்து நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி, கிராம பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகே சட்டவிரோதமாக தொடா்ந்து நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி, கிராம பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுகுடல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சட்ட விரோதமாக மது விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பலா் மதுபானங்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனராம். இதனால், சிறுகுடல் கிராமத்தில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்து, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனராம். இதுகுறித்து, மருவத்தூா் போலீஸாரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுகுடல் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com