பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்
By DIN | Published On : 26th April 2023 10:17 PM | Last Updated : 26th April 2023 10:17 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி தலைமை வகித்தாா். மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் முன்னிலையில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இம் முகாமில் பெறப்பட்ட 25 மனுக்களில், 5 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.
புதன்கிழமை தோறும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை முகாமில் பங்கேற்கவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம்- பாலக்கரை வழித்தடத்தில் காவல்துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் முகாமில், மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...