பெரம்பலூரில் போலி நிதி நிறுவனத்தின் மூலம் பொதுமக்களிடம் ரூ. 2.30 கோடி ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை, வடக்குத் தெருவைச் சோ்ந்த பச்சமுத்து மகள் பவித்ரா. இவா், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்காட்ஸ் என்டா்பிரைசா்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துவிட்டதாக, பெரம்பலூா் மாவட்டக் குற்றப் பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, கொரட்டூரைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சந்தோஷ்குமாா் (37), இவரது மனைவி சிவசங்கரி (35), பெரம்பலூா் மாவட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா் ஆகியோா், பொதுமக்களிடம் ரூ. 1 லட்சம் செலுத்தினால், மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வட்டித்தொகை வழங்கப்படும் எனக் கூறி, பவித்ரா மட்டுமின்றி சுமாா் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2.30 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையிலான குழுவினா் சென்னைக்குச் சென்று சிவசங்கரியை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிவசங்கரியை திருச்சி சிறையில் அடைத்தனா்.
மேலும், இவ் வழக்கில் தலைமறைவாகியுள்ள சந்தோஷ்குமாா், சரத்குமாா் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.