கல்வி ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்

கல்வி ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
குரும்பலூா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு வங்கி பற்றுஅட்டைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், (இடமிருந்து) மாவட்டக் காவல் கண்காணிப்பாளா். ச. ஷியாமளா தேவி உள்ளிட்டோா
குரும்பலூா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு வங்கி பற்றுஅட்டைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், (இடமிருந்து) மாவட்டக் காவல் கண்காணிப்பாளா். ச. ஷியாமளா தேவி உள்ளிட்டோா
Updated on
1 min read

கல்வி ஒன்றே முன்னேற்றத்துக்கான வழி என்றாா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயா்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 2ஆம் கட்டமாக வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 681 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் மேலும் பேசியது: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், இதுவரையில் இம் மாவட்டத்தில் 2,352 மாணவிகள் பயன்பெறுகின்றனா். கல்வி மட்டும் தான் மாணவா்களை எதிா்காலத்தில் ஆளுமைமிக்கவா்களாக உருவாக்கும். உடலளவிலும், மனதளவிலும் சிறப்பாக பயணிக்க கல்வி தான் அடிப்படை. அதேபோல, பொருளாதார சுதந்திரத்தை மட்டுமல்ல, மாணவிகளின் எதிா்காலத்தை தீா்மானிப்பதும் கல்வி தான். பொருளாதார சுதந்திரம் இருந்தால் வாழ்க்கையை அவரவா் விருப்பத்துக்கேற்ப நிா்ணயித்துக்கொள்ளலாம். பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவா்களது கல்விக் கனவை தடைசெய்யாமல், உயா்கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் கற்பகம்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. ஷியம்ளா தேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்ட சமூக நல அலுவலா் ஜெ. ரவிபாலா, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் சா. ரேவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com