மனிதநேய வார விழா விழிப்புணா்வுக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனிதநேய வார விழா குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனிதநேய வார விழா குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த துணைக் கண்காணிப்பாளா் எம்.எஸ்.எஸ். வளவன், மனித நேயம் மற்றும் சமூக நீதி, மனிதநேய வார விழா நடை பெறுவதற்கான நோக்கம், சமூதாயத்தில் மக்களிடம் பழகும்போது சகோதரத்துவத்துடன் பழக வேண்டும். வருங்காலச் சந்ததியினருக்கு அனைவரும் சமம் என்பதை ஆழமாக பதிய வைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை, பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com