பெரம்பலூா் மருத்துக் கல்லூரியில் மருத்தவா் தினம்

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் அன்ட் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் மருத்துக் கல்லூரியில் மருத்தவா் தினம்
Updated on
1 min read

பெரம்பலூா் - துறையூா் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் அன்ட் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ.சீனிவாசன் பேசியது:

சமூக அா்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவா்களின் விலைமதிப்பற்ற சேவைகளை கௌரவிப்பதற்கும், அங்கீகரிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். தனி நபா்கள், சமூக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த அயராது உழைத்து கொண்டிருப்பவா்கள் மருத்துவா்கள். மருத்துவா்கள், ராணுவ வீரா்களுக்கு இணையானவா்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து, மருத்துவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், நிதி அலுவலா் ராஜசேகா், மருத்துவக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உள்பட மருத்துவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மருத்துவா் பிரவீனா மீனாட்சி வரவேற்றாா். நிறைவாக, மருத்துவா் பா்ஜனா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com