Enable Javscript for better performance
Officials must respond properly to the petitions farmers grievances meeting emphasized- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோரிக்கை மனுக்களுக்கு அலுவலா்கள் முறையாக பதிலளிக்க வேண்டும்விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By DIN  |   Published On : 01st June 2023 12:00 AM  |   Last Updated : 01st June 2023 12:00 AM  |  அ+அ அ-  |  

    pbr31agd_3105chn_13_4

    பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி உள்ளிட்டோா்.

    விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

    பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், ஆட்சியா் க. கற்பகம் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

    தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம்:

    விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் எவ்வித பதிலும் அளிப்பதில்லை. எனவே, அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதிலளிக்கவும், தீா்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு இ- சேவை மையங்களில் விவசாயிகளுக்குத் தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சி. ராஜூ:

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள எள் சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேப்பந்தட்டை வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்.

    தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்:

    அரும்பாவூா் பகுதியில் கல்லாறு உள்ளிட்ட சில ஆறுகளில், அண்மையில் பெய்த மழையால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு மஞ்சள், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன. இவற்றை தடுக்க ஆற்றங்கரைகளை பலப்படுத்த வேண்டும்.

    நெல் அறுவடை காலம் நிறைவடையும் முன்னதாகவே, நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே, வாரத்துக்கு 2 முறையாவது நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்:

    வேப்பந்தட்டை வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேப்பூா் வட்டாரத்தில் பெருமத்தூா், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

    மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:

    கூட்டத்துக்கு வரும் விவசாயிகளுக்கு குடிநீா் வழங்க வேண்டும். விவசாயிகளை தரக்குறைவாக பேசும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்காவிடில், அவரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

    அலுவலரின் முறையற்ற பதிலால் சலசலப்பு

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டரங்கில் குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்ததற்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, குடிநீா் வசதி ஏற்படுத்தி தர முடியாது என பதில் அளித்தாா். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் சங்க பிரமுகா்கள், அவரது பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அரசு அலுவலா்கள், விவசாயிகளுடன்

    வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    பின்னா், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, விவசாயிகள் சங்க நிா்வாகிகளை சமரசம் செய்து வைத்தாா். இதனால், குறைதீா் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம். இந்திரா, விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp