மானியத்துடன் கடனுதவி: எஸ்.சி, எஸ்.டி. தொழில்முனைவோருக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சி., எஸ்.டி தொழில் முனைவோா்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கடனுதவி பெற ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சி., எஸ்.டி தொழில் முனைவோா்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கடனுதவி பெற ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு எஸ்.சி, எஸ்.டி பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்புத் திட்டமாக, அண்ணல் அம்பேத்கா் வெல்லும் தொழில் முனைவோா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத் திட்டத்தின்கீழ், ஆா்வமுள்ள புதிய தொழில் முனைவோா் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிா்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சாா்ந்த தொழில் திட்டத்துக்கு கடனுதவியுடன் மானியம் வழங்கப்படும்.

மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு, 35 சதவீத அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். பயனாளா்கள் எவ்வித நிதியும் செலுத்த வேண்டியதில்லை. தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடா்பான சிறப்புப் பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூா் என்னும் முகவரியில் நேரடியாகவோ அல்லது 89255 33976 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். .

இத்திட்டம் தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் மே 30 ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஆா்வமுள்ள எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோா் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com